Tuesday 22 March, 2011

தூய்மை

தன் கணவனுக்கு பிடித்த தக்காளி சட்னி செய்வதற்காக, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்றாக கழுவி அவற்றை நன்றாக தூய்மை செய்யப்பட்ட ஒரு தட்டில் வைத்து நறுக்கி கொண்டிருந்தாள் அனு.

இட்லி குக்கரில் இட்லி  வெந்து கொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடத்தில் டிபன் ரெடியாகிவிடும்.

ஆனால் அதற்குள் பாஸ்கர் குளித்துவிட்டு வந்துவிட்டான்.

"அனு .......... சமையல் முடிந்துவிட்டதா? ஆபீஸ்க்கு நேரம் ஆயிட்டு" என்றான்.

"இன்னும் இல்லங்க, கொஞ்ச நேரம் பொறுங்க" என்றாள்.

"என்னைக்கு தாண்டீ, நீ சீக்கிரம் சமச்சிருக்க? நீயும் உன் சாப்பாடும் நீயே  கொட்டிக்க. நான் கடைல சாப்பிட்டுகிறேன்". என்று சொல்லிக்கொண்டே தலையை  சீவியவன் ,  சட்டையை போட்டுகொண்டு கிளம்பிவிட்டான். 

ஹோட்டலுக்கு  போய் இரண்டு தோசை ஆர்டர் செய்தான்.

வாயில் குதப்பிய வெற்றிலை பாக்கு எச்சில் தெறிக்க தெறிக்க பேசிக்கொண்டே  தோசை வார்த்துகொண்டிருந்தார். அந்த ஹோட்டல் சமையல்காரர்.

அவர் சுட்ட தோசையை கழுவாத ஒரு தட்டில் தூய்மை செய்யப்படாத ஒரு இலையை வைத்து தலையை சொறிந்துகொண்டே ஒரு தோசையை எடுத்து 
வைத்து பாஸ்கரிடம் கொடுத்தான். உணவு பரிமாறுபவன்.

பாஸ்கர் அதை சுவைத்து சாப்பிட்டான். மதியமும் ஹோட்டலில் தான் சாப்பிடவேண்டும். வீட்டிற்கு போககூடாது  அப்ப தான் அவளுக்கு புத்தி வரும். என நினைத்துகொண்டான்.

அங்கே வீட்டில் அவனது மனைவி மதிய உணவிற்காக ஏற்பாடு செய்துகொண்டிருந்தாள். கணவனுக்கு பிடித்த சாம்பாரும், உருளைகிழங்கு வறுவலும் செய்வதற்காக காய்கறிகளை தூய்மையாக கழுவி நன்றாக அலசிய தட்டில் எடுத்து வைத்துகொண்டிருந்தாள். 

No comments:

Post a Comment