Tuesday 29 March, 2011

பரிசு

       அந்த சட்டைய பார்த்ததுமே எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. பல கடைகள் ஏறி இறங்கி பார்த்து பார்த்து வாங்கிய சட்டை கரித்துணியை  போல் கேவலமாய் ஒரு ஓரத்தில் கிடந்தது. 

        என் தோழியினுடைய குழந்தையின் முதல் பிறந்தநாளுக்கு நான் பரிசாக கொடுத்த சட்டை. பிறந்தநாள் முடிந்து முழுமையாக இரண்டு மாதம் கூட முடியவில்லை. அதற்குள் அந்த சட்டைக்கு இந்த நிலைமை. 

      பிறந்தநாள் அன்று இங்கு வந்ததுதான்,  மறுபடியும் இன்று தான் அவளுடைய வீட்டுக்கு வந்திருக்கிறேன். அந்த சட்டையை பார்க்கும் போது ஏன்டா நாம இந்த சட்டைய பரிசாக கொடுத்தோம், ஏன்டா இந்த வீட்டுக்கு வந்தோம் என்பது போல இருந்தது. ஒரு வேளை அவள் நம்மை மதிக்கவில்லையோ என தோன்றியது எனக்கு.

    என்னுடைய தோழி உள்ளே எனக்காக காபி போட்டுகொண்டிருந்தாள். அவள் வெளியே வரட்டும்.  என நினைத்துகொண்டிருந்தேன். 

      ஆனால் அவள் வெளியே வரும் போதே," என்னடி,  அந்த சட்டையையே பாத்துகிட்டிருக்க. அது நீ வாங்கிட்டு வந்த சட்டைதான். அந்த சட்டைய எல்லோருக்கும் பிடித்திருந்தது தெரியுமா? பாப்பாவ  எங்க தூக்கிகிட்டு போறதா இருந்தாலும் இந்த சட்டயதான்  நான் போட்டுவிடுவேன். எங்க வீட்டுககாரர்க்கு  கூட இந்த சட்டைய ரொம்ப பிடிக்கும். எப்ப பார்த்தாலும் இந்த சட்டைய போட்டு போட்டு வீணா போயிட்டு, ஆனாலும் தூக்கிபோட மனசு வரல. அதான் எடுத்து வச்சிருக்கேன்". என்றாள்.

      இப்போது என்னுடைய உள்மனசு அவளை மனதிற்குள் திட்டியதற்காக   மானசீகமாக என் தோழியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தது.

    
    

No comments:

Post a Comment